தமிழ்நாடு
தமிழ்நாடு தமிழகம் | |||
— மாநிலம் — | |||
| |||
அமைவிடம் | அமைவு: | ||
நாடு | ![]() | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டங்கள் | 32 | ||
நிர்மானிக்கப்பட்ட நாள் | நவம்பர் 1, 1956[1] | ||
தலைநகரம் | சென்னை | ||
மிகப்பெரிய நகரம் | சென்னை | ||
ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] [2] | ||
முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[3] [4] [5] | ||
உயர்நீதிமன்ற நீதிபதி | எம். யூசுப் இக்பால் | ||
சட்டமன்றம் (தொகுதிகள்) | ஓரவை (235) | ||
மக்கள் தொகை • அடர்த்தி | 72 (7வது) (2011) • 511 /km2 (1 /sq mi) | ||
கல்வியறிவு | 80.3% (11வது) | ||
மொழிகள் | தமிழ்,ஆங்கிலம் | ||
---|---|---|---|
நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) | ||
பரப்பளவு | 130058 கிமீ2 (50216 சதுர மைல்) | ||
ISO 3166-2 | IN-TN | ||
இணையதளம் | tn.gov.in |
தமிழ்நாடு (Tamil Nadu) ஓர் இந்திய மாநிலமாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை ராஜ்ஜியம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனை தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்[7]. பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
பொருளடக்கம்[மறை] |
[தொகு] புவியமைப்பு
தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தென் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது.நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.
இம்மாநிலத்தின் முதன்மையான ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் குடகு மலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி ஆகியவை பிற முதன்மையான ஆறுகளாகும்.
மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் தலைநகரமுமாகும். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா கடற்கரை சென்னையிலேயே உள்ளது. மதுரை,திருச்சிராப்பள்ளி, சேலம்,திருநெல்வேலி , ஈரோடு,கோயம்புத்தூர்,திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும்.
[தொகு] வரலாறு
- முதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டு வரலாறு
“ | வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் | ” |
தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இலக்கியக் குறிப்புகளைக் காட்டலாம்:
“ | வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறநானூறு, 168 :18) | ” |
“ | இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5) | ” |
“ | இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38) | ” |
“ | சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் (மணிமேகலை, 17: 62) | ” |
தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருந்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்புபடுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.
இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.
பாண்டியர்களுடைய காலம் கிமு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால்[who?] கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க அரச பரம்பரைகளில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.
[தொகு] கிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டு வரை
முற்காலச் சோழர் கிபி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது.[தொகு] கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரை

கடற்கரைக் கோயில்; அமைத்தவர்: பல்லவர்; இடம்: மாமல்லபுரம்; காலம்: (கி.பி.8ம் நூற்றாண்டு.) – யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களம்.
இக்காலக்கட்டத்தில் (கிபி 300 - கிபி 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. [8]
[தொகு] 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டு வரை
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராசராச சோழன் மற்றும் அவனது மகனான இராசேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஆற்றல் மிக்கவர்களாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மைய இந்தியா, ஒரிசா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.
இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, சாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.
[தொகு] 14ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இசுலாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் ஆற்றலற்றவர்களாக்கி இசுலாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இசுலாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விசயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். அம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விசய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விசயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டன. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது. தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.
இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.
[தொகு] 17 ஆம் நூற்றாண்டு
1639 இல் ஆங்கிலேயர்கள் மதராசில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். மருது பாண்டியர், புலித்தேவன். மாவீரன் அழகுமுத்துக்கோன், மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, ஒண்டி வீரன், வெண்ணி காலடி, தீரன் சின்னமலை, கட்டன கருப்பணன் போன்றோர் ஆட்சியாளர்களுக்கு வெள்ளையரை எதிர்த்து போரிட படைகளை தலைமையேற்று நடத்தினர். --[தொகு] 20 ஆம் நூற்றாண்டு
1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராசு மாகாணம்(The Madras Province) மதராசு மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1969இல், மதராசு மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கேரள மாநிலத்தின் தென்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழிடம் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாக்கப்பட்டு, நவம்பர் 1, 1956இல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.[தொகு] பாரம்பரியம்
தமிழ்நாடு அரசு குறியீடுகள் | |
மொழி | தமிழ் |
சின்னம் | திருவில்லிபுத்தூர் கோபுரம் |
பாட்டு | தமிழ்த்தாய் வாழ்த்து |
விலங்கு | வரையாடு |
பறவை | மரகதப் புறா |
மரம் | பனை |
பூ | செங்காந்தள் கார்த்திகைப் பூ |
விளையாட்டு | கபடி |
ஆடல் | பரதநாட்டியம் |
சுப்பிரமணிய பாரதி, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. இராமன், பெருந்தலைவர் காமராசர், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், ஆர். வெங்கட்ராமன், சி. என். அண்ணாதுரை , ஈ.வெ.ராமசாமி (பெரியார்), சீனிவாச ராமானுசன், அப்துல் கலாம், பாரதிதாசன், திரு.வி.க., கண்ணதாசன் ஆகியோர் மாநிலத்தின் நன்கு அறியப்பட்டவர்களில் சிலராவர். இவர்களோடு, இளங்கோவடிகள், கண்ணகி, திருவள்ளுவர்,தொல்காப்பியர் , ஔவையார், கம்பர், கரிகால்சோழன், இராசராச சோழன்,மருதநாயகம் போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும்.
[தொகு] அரசியல்
- முதன்மைக் கட்டுரை: தமிழக அரசியல்
தமிழ் நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன.காங்கிரசு கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் , பாரதிய ஜனதா கட்சி,மனிதநேய மக்கள் கட்சி,புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி,மற்றும் முஸ்லீம் லீக் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர்கள் மூவர்: சி. என். அண்ணாதுரை (இடது); மு. கருணாநிதி (நடுவில்); ம. கோ. இராமச்சந்திரன் (வலது)
1967 முதல் 2011இல் கடைசியாக நடந்த சட்ட மன்ற தேர்தல் வரை தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன. தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உண்டு என்றாலும், இது வரை தனிக் கட்சி ஆட்சியே நடைபெறுகிறது. முதன் முறையாக தி.மு.க. ஒரு அறுதிப் பெரும்பான்மையற்ற சிறுபான்மை அரசாகச் (2006-2011) செயல்பட்டது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும்,பங்கேற்கவும் செய்கின்றன.
தி.மு.க.வின் 2006-2011 ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகத்தின் நலன்,இலங்கைதமிழர் பிரச்சினை, இட ஒதுக்கீடு, காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சினை, விவசாயிகள், பாமரர் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நலன், ஊழல், இலஞ்சம், நிதிமோசடி, சாதி அரசியல் ஆகியவை தமிழ் நாட்டு அரசியலில் முதன்மைத்துவம் கொண்டிருந்தன. பின்னர் குடும்ப அரசியலும் முக்கியத்துவம் பெற்றது.
2011இல் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அமைச்சரவை 2011, மே மாதம் 16ஆம் நாள் ஆட்சிப்பொறுப்பேற்றது. இத்தேர்தல் முடிவுகள் தி.மு.க. ஆட்சிமீது மக்கள் அடைந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதாக பத்திரிகை விமர்சனங்கள் அமைந்துள்ளன.
தி.மு.க.வின் தோல்விக்குக் காரணங்களாகக் காட்டப்படுவை:
- கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் எங்கும் நிலவிய மின்வெட்டு
- விலைவாசி உயர்வு
- அரசியலில் ஆட்சிக் குடும்பத்தினரின் ஆதிக்கம்
- திரைத்துறையில் ஆட்சிக் குடும்பத்தினரின் தலையீடு
- ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்காதது
- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க. மைத்திய அமைச்சர் ஆ. ராசாவின் பங்கு
- நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் அ.இ.அ.தி.மு.க.வோடு கூட்டணி ஏற்படுத்தியது
[தொகு] மாவட்டங்கள்
தமிழ் நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன.
|
[தொகு] மக்கள்
தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். சூலை 1, 2008-இல் மக்கட்தொகை 66,396,000. இந்தியாவிலேயே அதிகப்படியாக 44% மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். 89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கு (5.65%), கன்னடம் (1.68%), உருது (1.51%), மலையாளம் (0.89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.[தொகு] பழங்குடிகள்
- முதன்மைக் கட்டுரை: தமிழகப் பழங்குடிகள்
[தொகு] சமயம்
சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
---|---|---|
மொத்தம் | 62,405,679 | 100% |
இந்துகள் | 54,985,079 | 88.11% |
இசுலாமியர் | 3,470,647 | 5.56% |
கிறித்தவர் | 3,785,060 | 6.07% |
சீக்கியர் | 9,545 | 0.02% |
பௌத்தர் | 5,393 | 0.01% |
சமணர் | 83,359 | 0.13% |
ஏனைய | 7,252 | 0.01% |
குறிப்பிடாதோர் | 59,344 | 0.10% |
[தொகு] பொருளாதாரம்
- முதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டுப் பொருளாதாரம்
[தொகு] தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை
- முதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை
[தொகு] கல்வி அறிவு மற்றும் சமூக வளர்ச்சி

கிண்டி பொறியியல் கல்லூரி சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முதன்மை வளாக பரப்பில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் பழமையான நுட்பவியல் கல்லூரி
தமிழ்நாடு கல்வியறிவு இந்தியாவின் சராசரியைவிட அதிகம். இங்கு 1991-2001 இடைப்பட்ட காலத்தில் 62.66%ல் இருந்து 73.47% கல்வியறிவு அதிகரித்தது. இதில் ஆண்கள்: 82.33% ம் பெண்கள்: 64.56%ம் ஆகும். தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள், 454 பொறியியல் கல்லூரிகள், 1150 கலை கல்லூரிகள், 2550 பள்ளிக்கூடங்கள் மற்றும் 5000 மருத்துவமனைகள் உள்ளன. இங்கு இரண்டு நடுவண் அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை சென்னையில் அமைந்த இந்திய தொழில்நுட்பக் கழகம், மற்றும் திருச்சியில் அமைந்த தேசிய தொழில்நுட்ப கழகம் ஆகும். மேலும் புகழ்மிக்க சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர், இலயோலாக் கல்லூரி, சென்னை ஆகியனவும் உள்ளன. தமிழகத்தில் வருடம்தோறும் 1,30,000 பேர் பொறியியல் படிப்பு முடித்து வெளியே வருகின்றனர்.
[தொகு] பண்பாடு
[தொகு] விழாக்கள்
- பொங்கல் திருநாள் (தமிழர் திருநாள் அல்லது உழவர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது), தமிழர்கள் கொண்டாடும் முதன்மையான திருநாள் ஆகும். தமிழ் மாதமான தை முதல் நாள் (சனவரி 14 அல்லது 15)-ல் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
- நோன்புப் பெருநாள், பக்ரீத், முகரம் இசுலாமியப் புத்தாண்டு
- பொங்கல் தவிர தீபாவளி, தைப்பூசம், வினாயகர் பிறந்த நாள், சரசுவதி (கல்விக் கடவுள்) பூசை, ஆயுத பூசை , கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற சமயம் சார்ந்த திருநாட்களும் கோடைக்கொண்டாட்டமாம் சித்திரைத்திருநாளும் (சித்திரை மாதம் முதல் நாள் - ஏப்ரல் 14 அல்லது 15) மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன.
[தொகு] சுற்றுலாத்துறை
- முதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை
தமிழ்நாட்டு ஓவியக் கலை
தமிழ்நாட்டு ஓவியக்கலை தொன்மையான வரலாற்றைக் கொண்டதாகும். அத்துடன் பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த ஓவியங்கள் முழுதாகவும், சிதைந்த நிலையிலும் குகைகளிலும், பழைய அரண்மனைகளிலும், கோயில்களிலும், வேறு கட்டிடங்களிலும் காணப்படுகின்றன.
பொருளடக்கம்[மறை] |
[தொகு] இலக்கியத்தில் ஓவியம்
ஓவியத்தோடு தொடர்புடைய குறிப்புக்கள் பல சங்கப் பாடல்களிலே காணப்படுகின்றன. சங்கம் மருவிய காலம் மற்றும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும், ஓவியம் பற்றிய தகவல்கள் இலக்கியங்களில் உள்ளன."ஓவியச் செந்நூ லுரைநூற் கிடக்கையும் என்ற மணிமேகலை வரிகள் ஓவிய சம்பந்தமான நூல் இருந்தமையை அறிவிக்கின்றது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் ஓவிய நூலென ஒன்றைக்கூறியிருக்கின்றனர்"[1].
ஆடைகளிற் சித்திரங்களை எழுதும் வழக்கம் பழமையானது. படம் என்னும் பெயர் இக்காரணத்தினாலேயே வந்தது என்பர் (படம் - வஸ்திரம்).
[தொகு] பாண்டியர் கால ஓவியங்கள்
முற்காலப் பாண்டியர் காலத்தைச் (கி.பி 550 - 950) சேர்ந்த குகை ஓவியங்கள் பலவற்றை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இக்காலத்தைச் சேர்ந்த, சித்தன்னவாசல் என்னுமிடத்தில் உள்ள குடைவரைக் கோயில் ஓவியங்கள் மிகவும் புகழ் பெற்றவை. இது தவிர அரிட்டாபட்டி, திருமலைப்புரம், ஆனைமலை, கீழ்க்குயில்குடி, கீழவளவு, கரடிப்பட்டி ஆகிய இடங்களிலும் மேற்படி காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் காணப்படுகின்றன.
[தொகு] பல்லவர் கால ஓவியங்கள்
தமிழ் நாட்டு ஓவியக் கலை வளர்ச்சியில் பல்லவர் காலத்துக்குச் சிறப்பான இடம் உண்டு. ஒவியத்தில் ஆர்வம் கொண்டிருந்தது மட்டுமன்றிப் பல்லவ மன்னர்கள் சிலர் சிறந்த ஓவியர்களாக இருந்துள்ளதாகவும் தெரிகிறது. மாமண்டூர், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பனைமலை, ஆர்மாமலை ஆகிய இடங்களில் பல்லவர் காலத்து ஓவியங்கள் உள்ளன.[தொகு] சோழர் கால ஓவியங்கள்
- circa1820.
[தொகு] பிற்கால ஓவியங்கள்
விஜய நகரப் பேரரசு காலத்திலும் ஓவியக்கலை தமிழ் நாட்டில் வளர்ச்சி பெற்றது. காஞ்சி கைலாச நாதர் கோவிலிலுள்ள ஓவியங்களைச் செப்பனிட்டதுடன், திருப்பருத்திக் குன்றம், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும் ஓவியங்களை விஜயநகர அரசர்கள் வரைவித்தனர்.இவர்களைத் தொடர்ந்து நாயக்கர் காலத்து ஓவியங்களும் தமிழ் நாட்டில் பல இடங்களில் காணப்படுகின்றன.
17 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரைக் கைப்பற்றி ஆண்ட மராட்டியரும் தமிழ் நாட்டு ஓவியக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளார்கள். தற்காலத்தில் தஞ்சாவூர் ஓவியப் பாணி என்று அறியப்படுவது இவர்கள் காலத்தில் உருவானதே.
[தொகு] தமிழகக் கோயில்களும் ஓவியங்களும்
தமிழகக் கோயில்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது குறித்த சில தகவல்களை டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் எனும் நூலில் 198 முதல் 201 வரை உள்ள பக்கங்களில் தெரிவித்துள்ளார். அவை- தமிழகத்தில் விசய நகர- நாயக்கரது ஓவியங்களை காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவரங்கம், திருவீழிமிழலை, சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, திருவெள்ளறை, அழகர்கோயில், நத்தம் கோவில்பட்டி, கூடலழகர் கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், புதுக்கோட்டை கோகர்னேஸ்வரர் கோயில், திருக்கோட்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில், திருநெல்வேலி மாவட்டம் இடைகால், திருப்புடை மருதூர், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் ஆகிய இடங்களில் காணலாம்.
- இவற்றில் காஞ்சிபுரம் மற்றும் திருப்பருத்திக் குன்றத்தில் மகாவீரர் கோயிலின் சங்கீத மண்டபத்தில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் இடம் பெற்றுள்ளது. இதில் சில காட்சிகளே மிஞ்சியுள்ளன. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் கருவறையின் முன்னுள்ள மண்டபத்திலும், ஆண்டாள் ஊஞ்சல் மண்டபத்திலும், நரசிம்மர் கருவறைக்கு முன்பாகவுள்ள மண்டபத்திலும் கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரதி - மன்மதன், வஸ்திர அபகர்ணன், காளியன் என்னும் அசுரன் ஆகியோரது ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
- திருவண்ணாமலையில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் திருப்பாற்கடலைக் கடையும் காட்சி, சிவன் உமையம்மையைத் திருமணம் புரியும் காட்சிகள், கோபியருடன் கண்ணன், முருகன் - வள்ளி திருமணக் காட்சி ஆகியன காணப்படுகின்றன.
- திருவரங்கம் கோயில் வேணுகோபாலன் சந்நிதியின் முன்பாக உள்ள மண்டபத்தில் பாகவத புராணக் காட்சிகளும், ஸ்ரீரங்கமகாத்மியம் தொடர்பான காட்சிகளும் அமைந்துள்ளன.
- தஞ்சை - திருவீழிமிழலைச் சிவன் கோயிலில் கண்ணனது லீலைகளே காணப்படுகின்றன. திருவெள்ளறை புண்டரிகாட்சர் கோயில் சித்திர மண்டபவிதானத்தில் திருமாலின் தசாவதாரம் மற்றும் இராமாயண ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருவிளையாடற் புராணக் காட்சிகளைத் தீட்டியிருந்தனர். இவை சமீபத்தில் நடந்த திருப்பணியின் போது அழிக்கப்பட்டு விட்டன. இதில் எஞ்சியிருப்பது மீனாட்சி சுந்தரேசுவரர் திருமண நிகழ்ச்சியை இராணிமங்கம்மாள் கண்டுகளிப்பது போன்ற ஓவியத் தொகுதி மட்டுமே.
- மதுரை கூடழலகர் கோயிலானது அஷ்டாங்க விமானக் கோயிலாதலால் மேலிரண்டு அடுக்குக் கருவறைகளிலும் திருமாலின் அவதாரங்கள், மும்மூர்த்திகள், திக்கு பாலகர்கள் போன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
- "மதுரை அழகர்கோயில் வசந்த மண்டபத்தில் இராமாயணம் முழுமையும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியம் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. கி.பி.1700-ல் வரையப்பட்ட இந்த ஓவியத் தொகுதியில் தெலுங்கு இராமாயணம் இடம் பெறுகிறது. இடில் தெலுங்கிலும், தமிழிலும் விளக்கம் எழுதப்பட்டுள்ளன. வட்டாரப் பழக்க வழக்கங்களின் தாக்கம் இடம் பெற்றுள்லது. இயக்க உத்திமுறை காணப்படுகிறது. ஆறுகளைக் காட்டும் போது வெள்ளை நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு அதில் மீ, ஆமை முதலியனவும் வரையப்பட்டுள்ளன." [2].இதே போன்று இராமாயண ஓவியங்கள் புதுக்கோட்டை திருக்கோகர்ணேசுவரர் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளன.
- மதுரைக்கருகிலுள்ள நத்தம் கோவில்பட்டியில் உள்ள சிவன் கோயிலில் சுந்தரபுராணம் தொடர்பாகவும், லிங்கமநாயக்கன் என்னும் மன்னன் செய்த சேத்திராடனம் என்னும் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வந்த நிகழ்ச்சியையும் ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர்.
- தஞ்சை பிருகதீசுவரர் கோயிலில் சோழர்கால ஓவியங்களுக்கு மேலே தீட்டப்பட்டிருந்த நாயக்கர் கால ஓவியங்களும் கருவறையின் மேற்பகுதி வெளிச்சுவரின் மேற்கு நோக்கிய சுவரில் இடம் பெற்றுள்ளன. அவை திசைக் காவலர்களது ஓவியம், அரம்பை, ஊர்வசி, அசுரர்களும் தேவர்களும் திருப்பாற்கடலைக் கடையும் காட்சி, திருமால், போர்க்களக் காட்சி, துர்க்கை, சும்பன், நிசும்பனை அழித்தல் முதலான போர்க்காட்சிகளாகும்."[3].
- சிதம்பரம் நடராசர் கோயிலில் இடம் பெற்றுள்ள விசயநகர நாயக்கரது சிற்பங்கள் லெபாக்ஷி பாணியை அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. அவற்றில் ரிசிபத்தினிகள் சிவபெருமானின் அழகில் மயங்கித் தமது ஆடைநெகிழ பின் தொடரும் காட்சி மிக அருமையாகத் தீட்டப்பட்டுள்ளது.
- கும்பகோணம் இராமசுவாமி கோயிலின் கருவறைப் பிரகாரச் சுவரில் இராமாயணம் முழுமையும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் இவை மறு திருத்தம் செய்யப்பட்டது போலத் தோன்றுகின்றன.
- நார்த்தாமலை விசயாலய சோழீசுவரர் கோயிலில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் சோழர் காலத்தவை என்றும், நாயக்கர் காலத்தவை என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இங்குள்ள ஓவியங்கள் புகைபடிந்து காணப்படுகின்றன.
- திருக்கோட்டியூர் சௌமிநாராயணப் பெருமாள் கோயிலில் அஷ்டாங்க விமானம் இடம் பெற்றுள்ளதால் மேலிரு கருவறைகளில் திசைக் காவலர்களது ஓவியங்களும் திருமாலின் பல்வேறு அவதாரங்களும் என ஓவியங்கள் அமைந்துள்ளன.
- திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாரது வரலாறு ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ வைகுண்டம் கோயில் கருவறைப் பிரகாரத்தில் 108 திவ்ய தேசங்களில் உறைகின்ற திருமாலின் வடிவங்கள் வரையப்பட்டுள்ளன. எனினும் இவற்றில் பெரும்பாலனவை அழிந்து விட்டன. இக்கோயிலின் கொடிக்கம்ப மண்டபத்தில் உள்ள சிறு மண்டபத்தின் விதானத்தில் நவதிருப்பதிகளில் உறைகின்ற திருமாலின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
- இடைகால் மற்றும் திருப்புடைமருதூர் கோயில்களில் இடம் பெற்றுள்ள நாயக்கர் கால ஓவியங்கள் இன்றும் அழியாது மிகத் தெளிவாக அக்கால ஓவியங்களை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளன
- இராமநாதபுரம் இராமலிங்க விலாசத்தில் இராமாயணம் முழுமையும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. தவிர பாகவத புராணமும் இங்கு முழுமையாகத் தீட்டப்பட்டுள்ளது.
Labels: State History
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home